;
Athirady Tamil News

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் இதுவரை உயிரிழப்பு!!

0

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து, சொல்லெண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு, தமது உறவுகளை தேடியலைந்து 115 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தனர். வவுனியா மாவட்டத்தில் 15 பேர் இவ்வாறு உயிரிழந்ததாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும், ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும், உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.