;
Athirady Tamil News

மணிப்பூர் கக்சிங் பகுதியில் தீவிரவாதி கைது..!!

0

மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையின் குழு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேற்கொண்டு விசாரணைக்காக ஹியாங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.