;
Athirady Tamil News

யாழில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து 18 துவிச்சகர வண்டிகள் முழுமையாகவும் உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது .

நாவற்குழியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டடுள்ளார்.

சந்தேக நபர் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி அவற்றை உதிரிப்பாகங்களாக்கி விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர் .

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் தற்போது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் அடையாளம் காட்டுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர் .

அண்மைய நாள்களாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள் அதிகரித்துள்ளன .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.