;
Athirady Tamil News

வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டது.!! (படங்கள்)

0

வவுனியாவில் 39 வது வெலிக்கடை படுகொலை நாள், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கோவில்குளத்தில் அமைந்துள்ள அரசியல் பிரிவான, ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் அலுவலகத்தில், புளெர் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் இன்று (27) அனுஸ்டிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 1983 ஆம் ஆண்டு பகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொதுமக்களுக்கு அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இவ் அஞ்சலி நிகழ்வில் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரத்தின் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, நினைவு சுரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நினைவுரையை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் காந்தீய அமைப்பின் முன்னாள் நிர்வாக செயலாளர் வே.கணபதிபிள்ளை, கட்சியின் நிர்வாக செயலாளர் பற்றிக், மன்னார் மாவட்ட இணைப்பாளர் கொன்சால், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ராஜா மற்றும் கழகத்தோழர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.