அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதியினால் இன்று (03) அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சேவைகளை வழங்கும்போது அரசக் கூட்டுத்தாபனம் அரச திணைக்களம் அல்லது உள்ளுாராட்சி நிறுவனம் மற்றும் கூட்டுறவுச்சங்கம் என்பன அவற்றுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.