;
Athirady Tamil News

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனா தொற்று..!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.58 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,65,751 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 84 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 9,206 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,02,993 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 லட்சத்து 70 ஆயிரத்து 330 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 211 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 738 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.