;
Athirady Tamil News

அகமதாபாத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு அருந்திய அரவிந்த் கெஜ்ரிவால்..!!

0

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலை யொட்டி குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். அவர் அகமதாபாத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விக்ரம் தண்டானி என்ற ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலைச் சந்தித்து தனது வீட்டிற்கு இரவு உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இரவு அகமதாபாத்தில் உள்ள காட்லோடியா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று, இரவு உணவு அருந்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.