;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான பெண் சிசு உயிரிழப்பு!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு தாய்ப்பால் புரக்கோரி உயிரிழந்துள்ளது.

மயிலிட்டி வடக்குப்பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த தம்பதியினருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குழந்தைக்கு பால் ஊட்டிய பின்னர் குழந்தை அசைவற்று இருந்த போது , வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

உடல்கூற்று பரிசோதனையின் போது ,பால் புரக்கேறியதில் குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் பால் சென்றமையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.