;
Athirady Tamil News

திருவனந்தபுரம் அருகே விபத்து- சாலையில் வைத்த அலங்கார வளைவு சரிந்து விழுந்ததில் தாய்-மகள் படுகாயம்..!!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை பகுதியில் ஓணப்பண்டிகையையொட்டி சாலையில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓணப்பண்டிகை முடிந்த பின்பும் இதில் சில அலங்கார வளைவுகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த நர்சு லேகா (வயது 44) தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்தது. மொபட்டில் சென்று லேகா மற்றும் அவரது மகள் மீது வளைவு விழுந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லேகாவும், அவரது மகளும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே லேகாவின் மொபட் மீது அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.