;
Athirady Tamil News

ஜப்பானில் பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளித்ததால் பரபரப்பு..!!

0

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.

பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நபர் பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்துள்ளார். இது தொடர்பாக டி.வி. சேனல் ஒன்று கூறும்போது, “முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கை நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் கூறிய பின்னர் அந்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார். ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.