;
Athirady Tamil News

டெல்லியில் அடைமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு..!!

0

டெல்லி முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இது நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.காலையில் பெய்யத்தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் மழை ஓயவில்லை. அடைமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிநின்று போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தின. மழை காரணமாக, ரோட்டில் எதிர்வந்த வாகனங்களை பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து, ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விட்டிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.