;
Athirady Tamil News

கொள்ளைச் சம்பவம்; உறுப்பினரை நீக்குகிறது மொட்டு கட்சி !

0

தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேசச​பை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கட்சி அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி தெரிவித்தார்.

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இக்கொள்ளைச் சம்பவத்துடன் எமது கட்சியின் பிரதேசசபை உறுப்பினருக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவரது பிரதேசச​பை உறுப்பினர் பதவியை பறிப்போம் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.