;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

0

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரமுல்லா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதுதொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.