;
Athirady Tamil News

துப்பாக்கி தொடர்பில் விசேட அறிவிப்பு!!

0

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒக்டோபர் 1 முதல் டிசெம்பர் 31க்கு இடையில் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று(04) அறிவித்துள்ளது.

டிசெம்பர் 31 க்குப் பிறகு உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அமைச்சு கூறியுள்ளது.

‘செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்குபவர்களுக்கு துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி அபராதம் விதிக்கப்படும்’ என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.