;
Athirady Tamil News

வேலணையில் சரஸ்வதி அம்மா ஞாபகார்த்த உதைபந்தாட்ட தொடர் ஆரம்பம்!! (படங்கள் இணைப்பு)

0

மூன்று மாவீரச்செல்வங்களின் தாயாரான வேலணை அம்பிகாநகரை சேர்ந்த அமரர் சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவினையொட்டி அவரது புதல்வரின் நிதி அனுசரணையில் வேலணை அம்பிகாநகர் மகேஸ்வரி மைதானத்தில் தீவக ரீதியிலான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுவருகின்றன .

நேற்றையதினம் ( 14.10.2022 ) அம்பிகாநகர் மகேஸ்வரி மைதானத்தில் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் செயலாளருமான கருணாகரன் நாவலன் அவர்களால் போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன . மேற்படி ஆரம்ப நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , அ. கனகையா மற்றும் தீவக உதைபந்தாட்ட சங்க உப தலைவர் ரஞ்சித் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர் . முப்பதுக்கு மேற்பட்ட அணிகள் கலந்துகொள்கின்ற இப்போட்டித்தொடருக்கான இறுதிப்போட்டிகள் எதிர்வரும் திங்களன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.