;
Athirady Tamil News

கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினர் தெரிவு!!

0

கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் தெரிவாகியுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் 55 ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை(26) மாலை இடம்பெற்ற வேளை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை மாநகர சபையின் பொதுவசதிகள் குழு உறுப்பினராக இருந்து கடந்த 2022.09.15 அன்று அமரத்துவமடைந்த ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கணபதிப்பிள்ளை புவனேஸ்வரியின் வெற்றிடத்திற்கு இவர் தெரிவானார்.

பொதுவசதிகள் குழு உறுப்பினர் வெற்றிடத்தை சபையில் மாநகர பொதுவசதிகள் குழு தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் சுட்டிக்காட்டி இருந்ததுடன் புதிய உறுப்பினரை தெரிவு செய்வதன் அவசியத்தை குறிப்பிட்டார்.

இதன் போது கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் சக கட்சி உறுப்பினரால் பிரேரிக்கப்பட்டதுடன் சபையும் ஏகமனதாக குறித்த பதவிக்கு புதிய உறுப்பினரை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.