;
Athirady Tamil News

அச்செழுவில் 18 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

குறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பலத்த மழைக்கு மத்தியில் இடம்பெற்றது.

இராஜேஸ்வரி அறக்கட்டளையின் உரிமையாளர் செல்லத்துரை திருமாறனின் நிதியுதவியில் 2021 ஆம் ஆண்டு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட கல்வியில் ஆர்வமுள்ள வீடு காணியற்ற வீடு கட்ட இயலாதவர்கள் என தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 18 பேருக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடானது கையளிக்கப்பட்டது

ஒவ்வொரு வீடுகளும் 55 லட்சம் பெறுமதியான 600 சதுர அடியினையுடைய இரண்டு அறைகளை கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த 18 வீடுகளும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்களால் கையளிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.