;
Athirady Tamil News

மத்தியபிரதேசத்தில் காதலியை கொன்று வீடியோ வெளியிட்ட காதலன்..!!

0

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார். எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ‘துரோகம் செய்யக்கூடாது’ என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார். அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார். அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்… நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.