;
Athirady Tamil News

தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்- 2022.!! (PHOTOS)

0

கல்வி அமைச்சின் கீழ் உள்ள மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவால் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (17.11.2022) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சித் திட்டமானது தொழில் வழிகாட்டல் சேவையினை வழங்குகின்ற உத்தியோகத்தர்களுக்கான தேசிய தராதர முறைமைக்குள் (NVQ)உள்வாங்குதல் மற்றும் இவர்களூடாக தொழில் வழிகாட்டல் சேவையை மேம்படுத்துவதுடன் (ERPL), Skills Passport மேம்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவிப் பணிப்பாளர் W.M.விஜேசிங்க (Tvec), உதவிப் பணிப்பாளர் M.L.பிரியந்த (Naita) மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து வருகை தந்திருந்த தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.