;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி!!

0

யாழ். மாநகர சபையில் மண்ணுக்காக மறைந்த மாவீர்ர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. சபை அமர்வு ஆரம்பித்ததும், சபையின் பிரதி முதல்வர் மாவீர்ர் வாரம் நெருங்கி வருவதனால் மாவீர்ர்களுக்காக இரு நிமிட அக வணக்கம் செலுத்திமாறு கோரிக்கை விடுத்தார். அதனையேற்ற சபை முதல்வர் அகவணக்கத்துக்கு அனுமதியளித்தார். சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பொருத்தமாகயிருக்கும் என்று பிரதி முதல்வர் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.