;
Athirady Tamil News

கேரளாவில் பணிசுமை காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..!!

0

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே அவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த ஸ்ரீஜா நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதிக பணிசுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.