;
Athirady Tamil News

வியட்நாமில் உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுங்கள் – உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை!!

0

கனடாவிற்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை(24) தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பொருளாதாரச் சூழல் காரணமாகவே தனது கணவன் புலம்பெயர்ந்து சென்றதாகவும், இங்கு ஏற்கனவே செய்து வந்த தொழில் நடவடிக்கைகளையும் கணவன் விற்பனை செய்து, அதன் மூலம் பெற்ற பணத்திலேயே கனடாவிற்குச் சென்றார் என கூறும் மனைவி, கணவனின் உடலை எடுத்துவர தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.