;
Athirady Tamil News

ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா! தஞ்சை பெரிய கோவில் உட்பட 100 நினைவுச் சின்னங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம்..!!

0

ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச. 1) அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் உட்பட நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.