;
Athirady Tamil News

இலங்கை அரச சேவைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு தங்கம்!!

0

Sir Lanka Government Services Sports Society நடாத்திய தேசியமட்ட விளையாட்டு விழா தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் 2022.12.20,22 திகதிகளில் நடைபெற்றது இதில் கல்முனை ஸாஹிரா கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் எம்.வை.எம்.றகீப் 110M Hurdles நிகழ்ச்சியில் 1ம் இடத்தைப்பெற்று தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை 4×100 யில் தங்க பதக்கமும், 4×400 யில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார். அதனோடு ஸாஹிரா கல்லூரியின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் AM.ஜப்ரான் 4×100 யில் தங்க பதக்கமும், 4×400 யில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்,

எமது பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் MM.றஜீப் 100m , நீளம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி 4ம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

மேலும் கல்வி திணைக்களத்தின் சார்பாக போட்டியில் கலந்து கொண்ட எமது கல்லூரியின் பழைய மாணவர்களும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுமான MUA.சம்லி 100m போட்டியில் முதலிடத்தையும், AGM.மஸ்பூத் 100m, 200m போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றதோடு 4×100 போட்டியில் முதலிடத்தையும், 4×400 போட்டியில் 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரியின் அதிபர் MI.ஜாபிர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.