;
Athirady Tamil News

அடுத்த ஆண்டு அரிசி இறக்குமதி செய்யபடமாட்டாது – விவசாய அமைச்சு அறிவிப்பு!!

0

2021 ஆம் ஆண்டு விளைச்சல் தோல்வியடைந்ததால், 2022 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாகவும், 2023 ஆம் ஆண்டு ஒரு அரிசி தானியத்தையும் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு இலங்கையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சியாளர்கள் குழுவுடன் நேற்று அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.

விவசாய உற்பத்திப் பொருட்கள் பல நாடுகள் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு பெருமளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகவும், அதேவேளை நாட்டில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையின் தரத்தை பூர்த்தி செய்யத் தவறியமைக்கான முக்கிய காரணத்தை அமைச்சர் அமரவீர எடுத்துரைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.