;
Athirady Tamil News

கோவில்குளம் இந்துகல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 21-01-2023 கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி. பு.உதயசேகரன் தலைமையில் நடைபெற்ற வருடாந்த திறனாய்வு போட்டியில், சேரன், சோழன், பாண்டியன் ஆகிய இல்லங்கள் கலந்துகொண்டிருந்தன.

இல்லங்களுக்கான அணிநடை மற்றும் பாண்ட் வாத்திய நிகழ்வுகள், ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு, உடற்பயிற்சி கண்காட்சி, பழைய மாணவர்களுக்கான கயிறிழுத்தல், பெண்களுக்கான சங்கீதக்கதிரை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றி கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக, வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர், ந.ச.செல்வரெட்னம்,நகரசபை உறுப்பினர். க.சந்திரகுலசிங்கம், உடற்கல்வி உதவி கல்விபணிப்பாளர் கு.செந்தில்குமரன், முன்னாள் கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வி.ஜோயல் நிரோசன் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.