;
Athirady Tamil News

யாழ் விமான நிலைய விஸ்தரிப்பு; உரிமையாளர்களுக்கான காணி நட்ட ஈட்டு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது.

காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும். காணி கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குகின்றன. மேலும் குறித்த காணி உரிமையாளர்களுக்கான கடிதமும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. பிரதேச செயகத்துக்கு வந்து இடத்தின் வரைபடத்தில் காணியை இனங்காண முடியும் அதில் இலக்கம் இடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.