;
Athirady Tamil News

ஜி20 கொடிகள் முன்பு போட்டோ எடுத்த போலீஸ் அதிகாரிகள்!!

0

புதுவை முதலியார்பேட்டை மரப்பாலம் அருகே சுகன்யா கன்வென்சன் சென்டரில் ஜி20 நாடுகளின் அறிவியல்-20 தொடக்கநிலை கூட்டம் நடந்தது. கூட்ட அரங்குக்கு வெளியே ஜி20 நாடுகளின் தேசியக் கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு வந்த பிரதிநிதிகள் அனைவரையும் இந்த தேசியக்கொடிகளின் அணிவகுப்பு வெகுவாக கவர்ந்தது. பலரும் கொடிகள் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் அந்த கொடிகளின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கொடியில் முன்பு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.