;
Athirady Tamil News

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

0

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 47). தொழிலாளி. சுனிலின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டன. இதனால் பதறி போன பெற்றோர் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கண்ணூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பக்கத்து வீட்டில் வசித்த சுனில் என தெரியவந்தது. போலீசார் சுனிலை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு தளிபரம்பு கோர்ட்டில் நடந்தது.

கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தளிபரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுனிலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை கட்டாவிட்டால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.