யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞனுக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டது

தெல்லிப்பழையில் 24 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது.
தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த இளைஞன் 6 மாதங்களாக நைஜீரியா கப்பல் ஒன்றில் வேலை செய்துவிட்டு கடந்த 28.06.2025 அன்று நைஜீரியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.