;
Athirady Tamil News

தன்னைத் தானே சாப்பிட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: நாடு கடத்தப்படும்போது நேர்ந்த சம்பவம்

0

அமெரிக்காவில் குடிவரவு ஒழுங்குமுறைகளை கடுமையாக்கும் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கையின்போது, விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர், அமெரிக்க அதிகாரிகளால் நாடு கடத்தப்படும் போதுபோதே, தன்னைத் தானே கடித்து துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், “அலிகேட்டர் ஆல்கட்ராஸ் டிடென்ஷன் சென்டர்”, புளோரிடாவில் நடந்ததாக அமெரிக்க உள்துறை செயலாளராக உள்ள கிறிஸ்டி நோம் தெரிவித்தார்

அவர் இந்த தகவலை குடிவரவு அதிகாரிகளுடன் சந்தித்தபோது பகிர்ந்ததாக Fox News தெரிவித்தது.

“ஒருவர் அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது, விமானத்தில் இருந்தபோதே தன்னை கடிக்கத் தொடங்கினார். உடனே மருத்துவ உதவி தேவைப்பட்டது,” என நோம் தெரிவித்தார்.

புளோரிடாவில் 8 நாட்களில் அமைக்கப்பட்ட புதிய டிடென்ஷன் சென்டர், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை தங்க வைக்க உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5,000 பேர் தங்கும் வகையில் இது அமைகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், இந்த குடிவரவு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தன்னிச்சையான நாடுகடத்தலை ஊக்குவிக்கின்றன. “நீங்கள் சுயமாக நாடு திரும்பினால், எதிர்காலத்தில் சட்டபூர்வமாக வர அனுமதி வழங்கப்படும்,” என கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், இந்நிலையுடன் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் கைது எண்ணிக்கை 2024-ம் ஆண்டில் 56,000-ஐ தாண்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.