;
Athirady Tamil News

புதிய லுக்கில் ராகுல் காந்தி- லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் விரிவுரையாற்றுகிறார்!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாதயாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாத யாத்திரையின்போது ராகுல்காந்தி தனது தலைமுடியை வெட்டாமலும், தாடியை ஷேவ் செய்யாமலும் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், ராகுல்காந்தி தற்போது புது லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தான் படித்த பல்கலைக்கழகமான இங்கிலாந்து தலைநகர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி நாளை விரிவுரையாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார். 21-ம் நுற்றாண்டை கேட்க கற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். அதன்பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்களை ராகுல்காந்தி சந்திக்க உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.