;
Athirady Tamil News

தைவானுக்கு அச்சுறுத்தல் 25 போர் விமானங்கள், 3 கப்பலை அனுப்பிய சீனா!!

0

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்கப்பல்களை சீனா அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமாக இருப்பது சீனாவை கோபத்துக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்க்கப்பல்களை சீனா தைவானை நோக்கி அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறுகையில், ” சீனாவின் 19 போர் விமானங்கள் தைவானின் வான்வெளியில் நுழைந்தது. இதேபோல் சீனாவின் போர் கப்பல்களும் தைவான் ஜலசந்தியில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தைவான் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் கடலோர ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக நெருக்கமாக கண்காணித்து பதிலடி கொடுத்து வருகின்றது” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.