;
Athirady Tamil News

காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் பலி!!

0

இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மோரகஹவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோத்தபொல, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜபக்ச நிவங்க ரொமேஷ் என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்

ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் காதலியைச் சந்திக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, ஹொரணை – கொழும்பு வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஹொரணை பிரதான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞன் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.