;
Athirady Tamil News

வரதட்சணை கேட்டு கொடுமை- 1 வயது குழந்தையை உடலில் கட்டி ஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பெலுகுப்பா, ஜி.டி பள்ளியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீரங்கராஜபுரத்தில் டி.ஆர்.டி.ஏ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தாடி பத்திரி, போக சமுத்திரத்தை சேர்ந்த மகேஸ்வரி (வயது 30) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சோமேஷ் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது. மகேஸ்வரி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நாகேந்திரா மனைவியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு நடந்தது. கணவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது மகேஸ்வரி தனது மகன் சோமேஷ் உடன் வெளியே சென்றார். வெளியே சென்ற மனைவி மற்றும் மகன் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்திட நாகேந்திரா நேற்று முன்தினம் ஸ்ரீ ரங்கராஜபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி மற்றும் அவரது குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பாகாலா அடுத்த நேத்திர குண்டா பகுதியில் உள்ள ஏரியில் மகேஸ்வரி தனது மகனை உடலில் கட்டியபடி பிணமாக மிதந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டிஎஸ்பி நரசப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மகன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கணவர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகனை உடலில் கட்டிக் கொண்டு குளத்தில் குதித்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.