;
Athirady Tamil News

இந்தியாவில் ஒரே நாளில் 441 பேருக்கு கொரோனா- 3 பேர் உயிரிழப்பு!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த வாரம் 200, 300 என படிப்படியாக உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் 441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 24-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 408 ஆக இருந்தது. அதன் பிறகு 105 நாட்கள் கடந்த நிலையில், தற்போது தான் மீண்டும் பாதிப்பு 400-ஐ தாண்டி உள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 90, கர்நாடகாவில் 89, கேரளாவில் 87, தெலுங்கானாவில் 42, தமிழ்நாட்டில் 34, குஜராத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 89 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 320 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 439 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,294 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 117 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகா, கேரளா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,779 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.