;
Athirady Tamil News

மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே!!

0

டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும், சகலத்தையும் வெட்டி வீழ்த்தும் தற்போதைய அரசாங்கம் விரட்டப்பட்டு, சாதாரன மனிதனும் கோலோச்சும் யுகம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் தங்களைப் பற்றியும் தங்களின் இருப்பு, பிழைப்பு மற்றும் தங்களின் நண்பர்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும், நாட்டை வங்குரோத்தாக்கி ஜனாதிபதியை நியமித்த 134 எம்.பி.க்களை பற்றி தான் நினைக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சுகபோகமாக கழித்து வருவதாகவும், பதவிக்காலம் முடியும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்த மாட்டேன் என தற்போதைய ஜனாதிபதி மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு இந்நாட்டின் 220 இலட்சம் மக்களை மறந்துபோனாலும் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் சாதாரண மக்களை மறக்கவில்லை எனவும், பலமான திட்டத்தின் ஊடாக குழுவாக மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரே மாற்று அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும், இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெளிவான பதில்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் செய்யாத பணியை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றியுள்ளதாகவும், அரச அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.