;
Athirady Tamil News

திருப்பதி கோதண்ட ராமசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

0

திருப்பதி கோதண்டராம சாமி கோவிலில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. 22-ந் தேதி உகாதி ஆஸ்தானம், 24-ந் தேதி கருட சேவை, 25-ந் தேதி அனுமன் வாகனம் நடக்கிறது.

31-ந்தேதி சீதாராமர் திருக்கல்யாணம், 30-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வரை ராமநவமி உற்சவமும், ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தெப்போற்சவமும் நடைபெறவுள்ளது. கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர், மோர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.