;
Athirady Tamil News

ரோட்டில் நிர்வாணமாக ஓடிய வெளிநாட்டவர் கைது !!

0

டெல்லியின் புறநகர் பகுதியான குருகிராமில் நைஜீரிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை 6 மணியளவில் நிர்வாணமாக ஓடினார். செக்டார் 69-ல் உள்ள துலிப் சவுக் அருகே சாலையின் நடுவே ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றதும் அவர் அருகே இருந்த கிராமத்தை நோக்கி ஒடினார். கிராமத்தினர் அவரை பிடித்து மரத்தில் கட்டினர்.

பின்னர் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனநிலை சீராக இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.