;
Athirady Tamil News

ஒரே ஆண்டில் 2116 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த தாய்மார்கள்- பாலுக்காக ஏங்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு உதவி!!

0

தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் ஏராளம் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக தாய்ப்பாலை தானம் செய்கிறார்கள். கோவையில் ரூபா என்ற இளம் மென்பொருள் என்ஜினீயர் அம்ருதம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி வந்தார்.

தற்போது இந்த இயக்கம் மாநிலம் முழுவதும் விரிவடைந்து ஏராளமான பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 2116 லிட்டர் தாய்ப்பாலை பெண்கள் தானம் செய்து இருப்பதாக ரூபா தெரிவித்தார். 17 மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்கள் இவ்வளவு பாலையும் தானம் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.