;
Athirady Tamil News

ஹிருணிகாவுக்கு புதிய பதவி !!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய மக்கள் சக்தியில் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராகவே ஹிருணிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளுக்காக முன்வருதலுக்கும், அவர்களை வலுவூட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர அதன் முதலாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.