;
Athirady Tamil News

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கு விசாரணை!!

0

புங்குடுதீவு மாணவி வித்யா என்ற பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (20) ப்ரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளின் மேல்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் 6-ம் திகதி விசாரிக்க திகதியை நிர்ணயித்துள்ளது.

இந்த மேன்முறையீடுகள் கோரப்பட்ட நேரத்தில், சிறையில் இருந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான “சுவிஸ் குமார்” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை நடத்திய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது.

தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் சார்பில் முறையிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.