;
Athirady Tamil News

’பெயருக்கு பலகை வேண்டாம்’’: நீதவான் பிரசன்ன அல்விஸ்!!

0

கைதிகளும் மனிதர்கள்” என்பது முக்கியமில்லை. சந்தேகநபர்களை மாட்டு மந்தை போன்று ஒற்றை சங்கிலியில் கட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டாம்” என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (21) திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளில் உள்ள பாரிய குறைபாடுகளையும் அவர் அம்பலப்படுத்தினார். குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் கைவிலங்கு மற்றும் சங்கிலியால் பிணைத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பிரதான நீதவான் கடுமையாக விமர்சித்தார்

சந்தேக நபர்களை மிருகக்கூட்டம் போல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டாம் எனவும், இனிமேல் சந்தேக நபர்களை அவ்வாறே நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் எனவும் நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.