;
Athirady Tamil News

மனைவி காதலனுடன் ஓடியதால் ஆத்திரம்- மாமனாரை சுட்டுக்கொன்ற வாலிபர்!!

0

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டம் சாரதா நகரில் வாலிபர் ஒருவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரது மனைவி காதலனுடன் அவுரங்காபாத்துக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் ஆத்திரமடைந்து மாமனாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தின்போது வாலிபர் கோபத்தின் உச்ச நிலைக்கு சென்று துப்பாக்கியால் மாமனாரை சுட்டுக்கொன்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.