;
Athirady Tamil News

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் !!

0

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார்.

மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய மன்னராக 3 ஆம் சார்ள்ஸ் மேற்கொண்டுள்ள முதலாவது இராஜாங்க விஜயம் இதுவாகும்.

இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 3 பிரான்ஸில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸ் மற்றும் ஜனாதிபதி பிராங்க் வோல்ட்டர் ஸ்டேய்ன்மேயர் ஆகியோரை மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் சந்தித்தார்.

இன்று அவர் ஜேர்மனியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

2020 நவம்பரில் அப்போது முடிக்குரிய இளவரசராக இருந்தபோது ஜேர்மன் பாராளுமன்றத்pல் சார்ள்ஸ் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.