;
Athirady Tamil News

அச்சுவேலியில் குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி!! (PHOTOS)

0

குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலைவகை மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான கண்காட்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தியது.

இவ் போசாக்கு கண்காட்சியானது அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கை மேம்படுத்துவதற்காக போசாக்கு உணவு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.
இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு பாரம்பரியமான உணவு முறையினை தயாரித்து வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கினை மேம்படுத்துவதற்கு உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உடுவில் சுகாதார பணிமனை அதிகாரி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதார பரிசோதகர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.