;
Athirady Tamil News

மார்ச்சில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!!

0

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போதுக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 69.99 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 59 பயணிகள் மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தில் 21,61,453 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 44,76,793 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தில் 3,55,702 பயணிகள் மற்றும் குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,393 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.