;
Athirady Tamil News

ஆசிரிய கலாசாலையில் உலகப் புத்தகநாள் நிகழ்வு!! (PHOTOS)

0

உலகப் புத்தகநாளை நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று 26.04.2023 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மூத்த எழுத்தாளரும் பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபருமாகிய கவிஞர் சோ. பத்மநாதன் கலந்து கொண்டு இன்றைய கல்வி முறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த சில சிந்தனைகள் என்ற பொருளில் உரையாற்றினார். கலாசாலை விரிவுரையாளர்கள் சார்பில்; சி. மனோகரன் புத்தக நாள் பற்றிய சிறப்புரையை மேற்கொண்டார்.
நிகழ்வின் நிறைவில் கவிஞர் சோ.ப. கலாசாலைச் சமூகத்தவரால் கௌரவிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.