;
Athirady Tamil News

குதிரை சவாரியின் போது ‘மிஸ் யுனிவர்ஸ்’ பலி: ஆஸ்திரேலியாவில் சோகம்!!

0

ஆஸ்திரேலியாவில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த மிஸ் யுனிவர்ஸ் சியன்னா வீர், திடீரென விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா நாட்டின் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியாளரான சியன்னா வீர் (23) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் சிட்னியில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் உயிர்காக்கும் ஆடையை அணியவில்லை. குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அந்த குதிரை கீழே விழுந்தது. அதனால் சியன்னா வீரும் நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு, ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியலில் இரட்டைப் பட்டம் பெற்றிருந்த இவர், 3 வயதிலிருந்தே குதிரை சவாரி செய்து வந்தார். இவரது மரணம் குறித்து ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் கிறிஸ் டுவயர் கூறுகையில், ‘உலகின் அன்பான ஆத்மாக்களில் நீங்கள் ஒருவராக இருந்தீர்கள், நீங்கள் மறைந்துவிட்டதால் தற்போது உலகம் இருண்டுவிட்டது’ என்று உருக்கமாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.