நாளை 10 மணிநேர நீர்வெட்டு !!
நீர்க்குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொலன்னாவ நகர சபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, அதுல் கோட்டே, நாவல, கொஸ்வத்தை ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வட்டு அமுலாகவுள்ளது.